செய்திகள்,விளையாட்டு இந்திய வீரர்களுக்கு ஆலோசனை வழங்கி வாழ்த்திய பிரதமர்…!

இந்திய வீரர்களுக்கு ஆலோசனை வழங்கி வாழ்த்திய பிரதமர்…!

இந்திய வீரர்களுக்கு ஆலோசனை வழங்கி வாழ்த்திய பிரதமர்…! post thumbnail image
புதுடெல்லி:- ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்ளக் காத்திருக்கும் இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தனித்தனியாக வாழ்த்து தெரிவித்து அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

“அமைதியான கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அதிரடியாக விளையாடுங்கள், அணியை நன்கு வழிநடத்துங்கள், இந்தியாவைப் பெருமைப்படுத்துங்கள், நீங்கள் நிச்சயம் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.

கோலி, உங்கள் மீது ஒட்டுமொத்த இந்தியாவும் நம்பிக்கை வைத்திருக்கிறது.

தவான், நீங்கள் அதிகமான ரன்களை எடுங்கள், உங்களை உற்சாகப்படுத்த இங்கு நாங்கள் இருக்கிறோம்.

ரகானே, இந்த மிகப்பெரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அஸ்வின் உங்கள் சுழற்பந்து வீச்சு மட்டையாளர்களை பீதியை உண்டாக்கி நமக்கு வெற்றியைத் தேடித்தர வேண்டும், நன்றாக விளையாடுங்கள்.

களத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் சுரேஷ் ரெய்னா பவுன்சர் உட்பட அனைத்து விதமான பந்து வீச்சையும் எதிர்கொண்டு உங்கள் அதிரடியான மட்டை வீச்சால் பந்துகளை மைதானத்திற்கு வெளியில் போகுமாறு விளாசுங்கள்” என்று மோடி ஆலோசனைகளை கூறியுள்ளார்.

மேலும் மோகித் ஷர்மா, முகமது சமி, உமேஷ், ஜடேஜா, ஸ்டுவர்ட் பின்னி, புவனேஸ்வர் ஆகிய வீரர்களுக்கும் தனது வாழ்த்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி