செய்திகள்,திரையுலகம் ‘என்னை அறிந்தால்’ படத்தின் இரண்டாம் பாகம் – மனம் திறந்த கௌதம் மேனன்!…

‘என்னை அறிந்தால்’ படத்தின் இரண்டாம் பாகம் – மனம் திறந்த கௌதம் மேனன்!…

‘என்னை அறிந்தால்’ படத்தின் இரண்டாம் பாகம் – மனம் திறந்த கௌதம் மேனன்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித்துக்கு ஒரு வருட இடைவெளிக்கு பின்பு வந்த திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போன்ற வெற்றிப்படங்களை தந்தவர் கௌதம் மேனன். ஆனால் கடந்த சில வருடத்தில் இவரின் படங்கள் தோல்வியை சந்தித்ததால் வாய்ப்புகளின்றி இருந்தார். அந்த சமயத்தில் அஜித் கொடுத்த வாய்ப்பு தான் என்னை அறிந்தால். இப்படத்தின் வரவேற்பு கண்டு மகிழ்ச்சியாக உள்ளாராம்.

இது குறித்து இவர் கூறுகையில், எனக்கும் அஜித்துக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை, இப்படத்திற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார், படத்தின் வரவேற்பை காணும் போது சந்தோஷமாக உள்ளது என்றார். மேலும், இப்படம் பெரிய வெற்றி பெற்றால் இரண்டாம் பாகம் இயக்கும் எண்ணமும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி