செய்திகள் 12 பெண்களை வலி நிவாரண மாத்திரைக்கு அடிமைப்படுத்தி கற்பழித்த டாக்டர்!…

12 பெண்களை வலி நிவாரண மாத்திரைக்கு அடிமைப்படுத்தி கற்பழித்த டாக்டர்!…

12 பெண்களை வலி நிவாரண மாத்திரைக்கு அடிமைப்படுத்தி கற்பழித்த டாக்டர்!… post thumbnail image
பென்சில்வேனியா:-அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரில் வசிக்கும் ஜேய். ஜெ. சோ என்ற 71 வயது மருத்துவர். கம்பர்லேண்ட் மற்றும் பிராங்க்ளின் ஆகிய நகர்களில் உள்ள சோவின் கிளினிக்கிற்கு, பல்வேறு விதமான வலிகளால் அவஸ்தைப்பட்டு வந்த 12 பெண்கள் சிகிச்சை பெற வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு ‘ஆக்சிகோடோன்’ என்ற வலி நிவாரண மாத்திரையை சோ தந்துள்ளார். இந்த மாத்திரையை தொடர்ந்து பயன்படுத்தி வந்த அப்பெண்கள் அதற்கு அடிமையாகிவிட்டார்கள்.

இந்த வாய்ப்பை தனக்கு சாதமாக பயன்படுத்திக்கொண்ட சோ, மாத்திரை தரவேண்டுமென்றால் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார். சோவின் நிபந்தனைக்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் எங்கே தங்களுக்கு இந்த மாத்திரை கிடைக்காதோ என்று பயந்த பெண்கள் அவரது ஆசைக்கு இணங்கியுள்ளார். இப்படி 12 பெண்களை தனது வலையில் வீழ்த்தியுள்ளார் இந்த 71 வயது தாத்தா.

பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் சோ-வை கைது செய்ய நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்ட நிலையில், மேல் அல்லென் போலீஸ் நிலையத்தில் தானாக முன்வந்து அவர் சரணடைந்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கடந்த 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டிலேயே இந்த கேடி தாத்தா மீது புகார் தந்த போதிலும் தற்போது அவர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி