செய்திகள்,திரையுலகம் நடிகர் கமலின் முன்னாள் மனைவியின் கண்ணீர் கதை!…

நடிகர் கமலின் முன்னாள் மனைவியின் கண்ணீர் கதை!…

நடிகர் கமலின் முன்னாள் மனைவியின் கண்ணீர் கதை!… post thumbnail image
சென்னை:-நடிகர் கமலின் முன்னாள் மனைவி பிரபல நடிகை சரிகா ஆவர். இவர்கள் இதுவரை சேர்ந்து பேட்டி கொடுத்தது என்றால் மிகவும் குறைவு தான். இவர்களுடைய பிள்ளைகள் தான் இன்று திரையுலகை கலக்கி கொண்டிருக்கும் ஸ்ருதி, அக்‌ஷரா.

சுமார் 13 வருடத்திற்கு முன்பு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் இருவரும் சேர்ந்து பேட்டியளித்தனர். இதில் இவர்கள் பேசுகையில், இருவருமே குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் வந்தவர்கள் தானாம். மேலும், சரிகா தன் 21 வயதில் சில பிரச்சனைகளால் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அப்போது அவர் கையில் 60 ரூபாய் பணமும், ஒரு கார் மட்டுமே இருந்துள்ளது.
ஒரு பெண்ணாக இருந்தும் அவர் தைரியமாக பல போராட்டங்களை சந்தித்துள்ளனர். இரவு நேரங்களில் அந்த காருக்குள் தான் உறங்கியுள்ளார்.

காலை நேரங்களில் நண்பர்கள் வீட்டில் இருந்து வந்துள்ளார். அப்போது யாராவது கருனையாக பார்த்தால் கூட இவருக்கு பிடிக்காதாம், இந்நிலையில் ஒரு ஹிந்தி படத்தில் கமலுடன் சேர்ந்து நடிக்கையில் தான் இவர்களுக்குள் காதல் மலந்ததாம். ஆனால், இதை பயன்படுத்தி கொண்டு கமல் உதவி செய்யவா?… என்று கேட்டால் அது சண்டையாக தான் போய் முடியும் என்று அதில் கூறியுள்ளார். இது போல் பல போராட்டங்களை தன் வாழ்வில் சந்தித்த சரிகா இன்று ஸ்ருதி, அக்‌ஷராவிற்கு பொறுப்பான அம்மாவாக திகழ்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி