அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் வாக்காளர்களின் உபசரிப்பால் நெகிழ்ந்து கண்ணீர் விட்ட கிரண்பேடி!…

வாக்காளர்களின் உபசரிப்பால் நெகிழ்ந்து கண்ணீர் விட்ட கிரண்பேடி!…

வாக்காளர்களின் உபசரிப்பால் நெகிழ்ந்து கண்ணீர் விட்ட கிரண்பேடி!… post thumbnail image
புதுடெல்லி:-70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு நாளை மறுநாள் (சனிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதில் பா.ஜனதாவின் சார்பில் முதல்-மந்திரி வேட்பாளராக ஓய்வு பெற்ற பெண் போலீஸ் அதிகாரி கிரண்பேடி போட்டியிடுகிறார். அவர் சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும்.இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள கிரண்பேடி டெல்லி நகரின் வீதிகளில் திறந்த வாகனத்தில் சென்று வாக்காளர்களிடம் ஓட்டு சேகரித்து வருகிறார். நேற்று, அவர் போட்டியிடும் கிருஷ்ணா நகர் தொகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது சாலையோர பிரசார கூட்டம் ஒன்றில் அவர் பேச வந்தபோது அங்கே கூடியிருந்த வாக்காளர்கள், தாங்கள் பிளாஸ்க்குகளில் கொண்டு வந்திருந்த தேநீரை ஊற்றி கிரண்பேடியிடம் கொடுத்தனர்.

வாக்காளரின் உபசரிப்பாலும், அன்பு மிகுதியாலும் நெகிழ்ந்துபோன அவருடைய கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது. பின்னர் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தவாறே கிரண்பேடி வாக்காளர்கள் மத்தியில் பேசினார்.அவர் கூறியதாவது:- என் மீது நீங்கள் கொண்டிருக்கும் அளவு கடந்த பாசத்தை விவரிக்க எந்த வார்த்தையும் இல்லை. இதை உங்கள் மீது மீண்டும் அன்பாக வெளிப்படுத்துவேன். தொடர்ந்து மக்களுடைய அன்பை பெறுவதற்காக என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன். உங்களுக்காக நேர்மையான முறையில் பணியாற்றுவேன். முறைகேடாக வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டதற்கு கெஜ்ரிவால் தைரியம் இருந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என்று சவால் விடுகிறார்.

இதை பரபரப்பு செய்தியாக ஆக்குவதற்காகத்தான் அவர் இப்படி பேசுகிறார். எந்த வகையிலும் தன்னைப் பற்றிய செய்தி வெளியாகவேண்டும் என்பதில் குறியாக இருப்பவர்தான் அவர். அவரைப் பற்றி நான் முன்பே அறிவேன். எப்போதுமே அவர் எதிர்மறையானதையே விரும்புவார். அவருக்கு தேவை அதுதான்.ஜெயிலுக்கு போகவேண்டும். அதன் மூலம் மக்களை தவறாக திசை திருப்பி ஓட்டுகளை பெறவேண்டும் என்பதே அவருடைய நோக்கம். அதற்காகத்தான் அவர் இப்படி சொல்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி