செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் 53 பயணிகளுடன் புறப்பட்ட தைவான் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து!…

53 பயணிகளுடன் புறப்பட்ட தைவான் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து!…

53 பயணிகளுடன் புறப்பட்ட தைவான் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து!… post thumbnail image
தைபேய்:-சங்ஷான் விமான நிலையத்திலிருந்து 53 பயணிகளுடன் தைபேயிலிருந்து கின்மென் தீவுகளுக்கு சென்ற ஏ.டி.ஆர்-72 என்ற இந்த விமானம், அந்நாட்டு நேரப்படி காலை 10.55 மணியளவில் விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து அங்குள்ள பாலத்தின் மீது மோதி கீலங் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. கீலங் ஆற்றங்கரையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் விமானம் விழுந்ததால் உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

இது வரை 10க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கான அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் 40 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. முன்னேறிச்செல்லக்கூடிய வேகத்தை விமானம் பெற முடியாததால் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் கார் ஒன்றும் சேதமடைந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி