செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் வீடு தேடி வரும் ரெயில் டிக்கெட்: பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்!…

வீடு தேடி வரும் ரெயில் டிக்கெட்: பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்!…

வீடு தேடி வரும் ரெயில் டிக்கெட்: பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்!… post thumbnail image
புதுடெல்லி:-ரெயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது, பணம் செலுத்துவதற்கு, ‘நெட் பேங்கிங்’ வசதியையோ, ‘கிரெடிட் கார்டு’ வசதியையோ அல்லது ஏ.டி.எம். கார்டு வசதியையோ பயன்படுத்த வேண்டும். ஆனால், சிலருக்கு கிரெடிட் கார்டு மற்றும் ஏ.டி.எம். கார்டு தகவல்களை வெளியிட தயக்கம் இருக்கும். வேறு சிலருக்கோ நெட் பேங்கிங் வசதி இருக்காது.

இத்தகையவர்களை கருத்தில் கொண்டு, புதிய முறை ஒன்றை இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, வழக்கம்போல, டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். பிறகு, நாம் பதிவு செய்த டிக்கெட்டை ‘பிரிண்ட்’ எடுத்துக் கொண்டு, ஐ.ஆர்.சி.டி.சி. ஊழியர் நேரில் வருவார். அவரிடம் டிக்கெட் பணத்தை செலுத்தி விட்டு, டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த வசதியைப் பெற, பயண நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும். டிக்கெட்டை நேரில் வந்து தருவதற்காக, தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு டிக்கெட் ஒன்றுக்கு ரூ.40-ம், ஏ.சி. வகுப்பு டிக்கெட் ஒன்றுக்கு ரூ.60-ம் கூடுதலாக வசூலிக்கப்படும். முதல்கட்டமாக, 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் இவ்வசதி அமலுக்கு வந்துள்ளது. முன்பதிவு கவுன்ட்டர்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் மற்றொரு முயற்சியாக இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி