செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு தேசிய விளையாட்டு: தமிழக பளுதூக்கும் வீரர் சதீஷ் தங்கம் வென்றார்!…

தேசிய விளையாட்டு: தமிழக பளுதூக்கும் வீரர் சதீஷ் தங்கம் வென்றார்!…

தேசிய விளையாட்டு: தமிழக பளுதூக்கும் வீரர் சதீஷ் தங்கம் வென்றார்!… post thumbnail image
திருவனந்தபுரம்:-35–வது தேசிய விளையாட்டுப் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 2–வது நாள் ஆட்டத்தில் தமிழக அணிக்கு முதல் தங்கப்பதக்கம் கிடைத்தது. டேபிள் டென்னிஸ் ஆண்கள் அணிகள் பிரிவில் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு– குஜராத் அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு 3–2 என்ற கணக்கில் வென்று தங்கப்பதக்கம் பெற்றது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பளுதூக்குதல் போட்டியில் தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்றார். இது தமிழகத்திற்கு கிடைத்த இரண்டாவது தங்கம் ஆகும். 77 கிலோ எடைப்பிரிவினருக்கான இப்போட்டியில் அரியானா வெள்ளிப் பதக்கமும், சத்தீஸ்கர் வெண்கலப் பதக்கமும் வென்றது. இதன்மூலம் தமிழ்நாடு 2 தங்கம், 4 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 6 பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி