செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையுமா?…

பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையுமா?…

பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையுமா?… post thumbnail image
புதுடெல்லி:-மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்கின்றன. அந்த வகையில் 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த விலை மாற்றியமைப்பு நடந்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்து தொடர்ந்து சரிந்து வருகிறது.

இதனால் கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்து இதுவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.14.69 அளவுக்கும், டீசல் விலை ரூ.10.71 அளவுக்கும் குறைந்து உள்ளது. அதே சமயம் வாகன எரிபொருளுக்கு விதிக்கப்பட்டு இருந்த கூடுதல் கலால் வரி மூலம் அரசுக்கு ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த 16-ந் தேதியில் இருந்து மேலும் குறைய தொடங்கி உள்ளது.

குறிப்பாக ரூபாய் அடிப்படையில் பேரல் ஒன்றுக்கு 8.66 சதவீத அளவுக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இது சில்லறை விற்பனை விலையில் எதிரொலிக்கும் என தெரிகிறது. பொதுத்துறை நிறுவனங்களின் வழக்கமான அட்டவணைப்படி பெட்ரோல், டீசல் விலை பிப்ரவரி 1ம் தேதி (நாளை) மாற்றியமைக்க வேண்டும். எனவே கச்சா எண்ணெயில் தற்போது ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சி, நாளைய மாற்றியமைப்பில் எதிரொலிக்குமா?… என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி