செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய் சம்பாதித்த மிகப்பெரிய சொத்து இதுதான்!…

நடிகர் விஜய் சம்பாதித்த மிகப்பெரிய சொத்து இதுதான்!…

நடிகர் விஜய் சம்பாதித்த மிகப்பெரிய சொத்து இதுதான்!… post thumbnail image
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து சென்ற வருட தீபாவளி சிறப்பாக வெளியான படம் ‘கத்தி’. சென்ற வருடத்தில் அதிகம் வசூல் செய்த படமாக பதிவாகியுள்ள ‘கத்தி’ 100வது நாளை நிறைவு செய்துள்ளது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் #KATHTHIHitsCentury என ட்ரண்டாக்கி கொண்டாடினர். மேலும் படக்குழுவினரும் தங்களது சார்பில் சமூகவலைத்தளத்தில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்திருக்கிறார்கள்.

இதில் விஜய் தன் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். நீங்கள் கொடுத்த அன்புக்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தை போதாது. இத்தனை வருடமாக நான் சம்பாதித்த மிகப்பெரிய சொத்து நீங்கள் தான் என தெரிவித்துள்ளார். உங்கள் ஆதரவிற்கு நன்றி என ட்வீட் செய்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. விஜய் சார், தயாரிப்பாளர்கள், மொத்த படக்குழுவினர் மற்றும் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி என ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார். படத்தின் இசையமைப்பாளர் அனிருத், ‘கத்தி‘ டீமுக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் நன்றி. ஏ.ஆர்.முருகதாஸ் சார், விஜய் சார், சமந்தா, ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி