செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் இந்தியாவின் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி!…

இந்தியாவின் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி!…

இந்தியாவின் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி!… post thumbnail image
புவனேஸ்வர்:-அணு ஆயுதங்களுடன் 5000 கி.மீ. விண்ணில் பாய்ந்து இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை இன்று மூன்றாவது முறையாக வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ஒடிசா மாநிலத்தின் கடற்கரை பகுதியான வீலர் தீவிலிருந்து இந்த ஏவுகணை சோதனை முயற்சி இன்று காலை மேற்கொள்ளப்பட்டது. மூன்றாவது முறையாக சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், தற்போது முதன் முறையாக கேனிஸ்டர் மூலம் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் சாலையிலும் இருந்தும் கூட இந்த ரக ஏவுகணை மூலம் எதிரிகளின் இலக்கை தாக்கமுடியும். மத்திய அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அவினாஷ் சந்தரின் செயல்திட்டத்தில் உருவாக்கப்பட்டது இந்த அக்னி ரக ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் மாதமே இந்த சோதனை முயற்சி மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் அமெரிக்கா அதிபர் ஒபாமா வருகையால் அது தள்ளிபோனது.

இன்று நடைபெற்ற சோதனை முயற்சியில் 300-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், ஐதராபாத்தில் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான ஆய்வுக்கூடம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுக்கூடங்களில் இருந்து வந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஏவுகணை மூலம் ஆசியாவில் உள்ள எந்த ஒரு நாட்டையும், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் ஒரு சில பகுதிகளையும் தாக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி