அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கண்டனம்!…

பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கண்டனம்!…

பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கண்டனம்!… post thumbnail image
புதுடெல்லி,:-டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி டெல்லி சாஸ்திரி பார்க்கில் காங்கிரஸ் சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:– சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோது பிரதமர் நரேந்திர மோடி தன் பெயர் பொறித்த கோட்–சூட் அணிந்திருந்தார். அதன் விலை ரூ.10 லட்சம். மக்கள் வரிப்பணத்தை தவறாக பயன்படுத்தும் வகையில் பிரதமர் மோடி ரூ.10 லட்சம் மதிப்புள்ள கோட்–சூட் அணியலாமா? ஒரு பிரதமர் இவ்வாறு செயல்படலாமா?

கருப்பு பண விவகாரத்தில் மக்களை முட்டாளாக்கும் வகையில் மோடியின் செயல்பாடு உள்ளது. மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கருப்பு பணத்தை மீட்டுக்கொண்டு வருவதாகவும், விலைவாசி உயர்வை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாகவும் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. முன்னுக்குப்பின் முரணான பதில்களை தெரிவித்து வருகிறார். அனைத்து விஷயத்திலும் மோடி அரசின் செயல்பாடு தோல்வி அடைந்துவிட்டது.

கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வந்து ஒவ்வொரு இந்தியரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் பணத்தை வழங்குவதாக அளித்த வாக்குறுதியை மோடி நிறைவேற்றினாரா?… டெல்லியில் உள்ள ஏழைகள் உள்பட ஒட்டுமொத்த மக்களின் வளர்ச்சியிலும் ஈடுபாடு காட்டுவது காங்கிரஸ் மட்டுமே. அவர்களின் கனவுகளை நிறைவேற்ற எங்கள் கட்சி தொடர்ந்து பாடுபடும். இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி