அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பிரதமர் மோடிக்கும், மக்களுக்கும் ஒபாமா நன்றி!…

பிரதமர் மோடிக்கும், மக்களுக்கும் ஒபாமா நன்றி!…

பிரதமர் மோடிக்கும், மக்களுக்கும் ஒபாமா நன்றி!… post thumbnail image
புதுடெல்லி:-அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக கடந்த 25ம் தேதி இந்தியா வந்தார். குடியரசு தின அணிவகுப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 3-வது நாளான நேற்று இறுதி நிகழ்ச்சியாக, டெல்லி சிறி போர்ட் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சி முடிவடைந்தவுடன், சவுதி அரேபியாவுக்கு செல்வதற்காக, அங்கிருந்து நேரடியாக டெல்லி பாலம் விமானப்படை தளத்துக்கு சென்றார்.

அங்கு தயாராக நின்றிருந்த தனது ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில், தன் மனைவி மிச்செலியுடன் ஏறினார். அவர்களை மத்திய மந்திரி பியுஷ் கோயல் மற்றும் உயர் அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர். விமானத்தில் ஏறியவுடன், வழி அனுப்ப வந்திருந்தவர்களை பார்த்து ஒபாமாவும், அவருடைய மனைவியும் கையசைத்தனர். இந்தியாவுக்கு வந்தபோது கூறியதைப் போலவே, விடை பெற்ற போதும் ‘நமஸ்தே’ என்று கூறினர்.

ஒபாமாவின் விமானம் மேலே எழும்பத் தொடங்கியவுடன், ஒபாமா சார்பில் வெள்ளை மாளிகை, சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தியை வெளியிட்டது. மறக்க முடியாத பயணத்துக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய மக்களுக்கு அவர்கள் காட்டிய அன்பான வரவேற்புக்கும் நன்றி என்று ஒபாமா சார்பில் அதில் கூறப்பட்டு இருந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி