அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் கெஜ்ரிவாலுக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பினார் கிரண்பேடி!…

கெஜ்ரிவாலுக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பினார் கிரண்பேடி!…

கெஜ்ரிவாலுக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பினார் கிரண்பேடி!… post thumbnail image
புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டசபைக்கான தேர்தலில் முதல்-மந்திரி வேட்பாளராக ஆம் ஆத்மி சார்பில் அதன் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். பா.ஜனதா சார்பில் ஓய்வு பெற்ற பெண் போலீஸ் அதிகாரி கிரண்பேடி முதல்-மந்திரி வேட்பாளராக களத்தில் உள்ளார். இந்நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் கெஜ்ரிவால்-கிரண்பேடி ஆகியோருடைய புகைப்படங்களையும் அருகருகே இணைத்து இவர்களில் யாரை முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள்?… என்று கேள்வி எழுப்பிய சுவரொட்டிகளை ஆட்டோவில் ஒட்டி பிரசாரம் செய்து வருகிறார்கள்.

மேலும் அந்த சுவரொட்டியில் கெஜ்ரிவாலை நேர்மையானவர் என்றும், கிரண்பேடியை சந்தர்ப்பவாதி என்றும் குறிப்பிட்டு உள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த கிரண்பேடி தனது வக்கீல் மூலம் விளக்கம் கேட்டு கெஜ்ரிவாலுக்கு நேற்று நோட்டீசு அனுப்பி உள்ளார். அதில், எனது பெயரை அனுமதியின்றி பயன்படுத்தியதோடு, என்னை சந்தர்ப்பவாதி என்றும் சுவரொட்டிகளில் குறிப்பிட்டு உள்ளீர்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இதற்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி