செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு மார்பில் பந்து தாக்கி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பலி!…

மார்பில் பந்து தாக்கி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பலி!…

மார்பில் பந்து தாக்கி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பலி!… post thumbnail image
கராச்சி:-ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் கடந்த நவம்பர் மாதம் உள்ளூர் போட்டியின் போது சீன்அபாட் வீசிய பந்து தலையில் தாக்கியதில் கோமா நிலைக்கு சென்று நினைவு திரும்பாமலேயே உயிர் இழந்தார். இது வீரர்கள், ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சி அளித்தது.

இந்நிலையில் பந்து தாக்கியதில் மற்றொரு வீரர் ஒருவர் பலியானார். இந்த துயர சம்பவம் பாகிஸ்தானில் நடந்து உள்ளது. பலியான வீரரின் பெயர் ஜீஷா முகமது. 18 வயதே ஆன அவர் ஆரன்கி நகரில் நடந்த கிளப் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். அப்போது வேகப்பந்து வீரர் வீசிய பந்து அவரது மார்பில் தாக்கியது.

இதில் நிலை குலைந்து மயங்கி கீழே விழுந்தார். அதிர்ச்சி அடைந்த சக வீரர்கள் உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஜீஷா முகமதுவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பந்து வேகமாக மார்பில் தாக்கிய அதிர்ச்சியில் இதயம் செயல் இழந்ததால் அவர் உயிர் இழந்து உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி