அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ஒபாமா, மோடி பேச்சு: இன்றிரவு 8 மணிக்கு ரேடியோவில் ஒலிபரப்பு!…

ஒபாமா, மோடி பேச்சு: இன்றிரவு 8 மணிக்கு ரேடியோவில் ஒலிபரப்பு!…

ஒபாமா, மோடி பேச்சு: இன்றிரவு 8 மணிக்கு ரேடியோவில் ஒலிபரப்பு!… post thumbnail image
புதுடெல்லி:-பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாதமும் ‘மான் கீ பாத்’ என்ற தலைப்பில் ரேடியோவில் பேசி வருகிறார். பொது மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தும், நாட்டின் வளர்ச்சி பற்றியும் இந்த நிகழ்ச்சியில் மோடி பேசுவதுண்டு. இந்த மாத மான் கீ பாத் நிகழ்ச்சியில் இந்திய குடியரசு தின விழாவுக்கு வரும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் மோடியுடன் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. இது பற்றி டுவிட்டர் தளத்தில் தெரிவித்த மோடி, ‘பொது மக்கள் எங்களிடம் கேட்க விரும்பும் கேள்விகளை அனுப்பலாம்’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து நூற்றுக்கணக்கானவர்கள் கேள்விகளை அனுப்பி இருந்தனர். அந்த கேள்விகள் தொகுக்கப்பட்டது. அவற்றுக்கு ஒபாமாவும், மோடியும் கூட்டாக பதில் அளித்தனர். நேற்று மாலை ஒபாமா, மோடி அளித்த பதில்கள் பதிவு செய்யப்பட்டது. பல கேள்விகளுக்கு ஒபாமா பதில் அளித்துள்ளார். இதனால் மான் கீ பாத் சிறப்பாக வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சிறப்பு ஒலிப்பதிவு இன்றிரவு 8 மணிக்கு அகில இந்திய ரேடியோவில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இதை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் கேட்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி