அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ஜெய்ஹிந்த் என செய்தி வெளியிட்ட வெள்ளை மாளிகை!…

ஜெய்ஹிந்த் என செய்தி வெளியிட்ட வெள்ளை மாளிகை!…

ஜெய்ஹிந்த் என செய்தி வெளியிட்ட வெள்ளை மாளிகை!… post thumbnail image
புதுடெல்லி:-டெல்லி பாலம் விமான நிலையத்துக்கு நேற்று காலையில் வந்து சேர்ந்த ஒபாமாவை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார். பின்னர் ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு பாரம்பரிய முறையிலான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஒபாமாவுக்கு இந்தியாவில் வழங்கப்பட்ட சிறந்த வரவேற்பு குறித்து அமெரிக்கா மகிழ்ச்சி தெரிவித்து உள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘ஜெய்ஹிந்த்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒபாமாவை குடியரசு தினவிழாவுக்கு அழைத்து கவுரவப்படுத்தியதுடன், இந்தியா-அமெரிக்கா உறவில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது என்றும், தலைநகர் டெல்லியில் சூரியன் உதித்துள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி