செய்திகள்,திரையுலகம் ‘பாகுபலி’ பட தமிழ் உரிமையை வாங்கியது ஸ்டுடியோ கிரீன்!…

‘பாகுபலி’ பட தமிழ் உரிமையை வாங்கியது ஸ்டுடியோ கிரீன்!…

‘பாகுபலி’ பட தமிழ் உரிமையை வாங்கியது ஸ்டுடியோ கிரீன்!… post thumbnail image
சென்னை:-இயக்குனர் ராஜமௌலி, தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இயக்கி வரும் படம் ‘பாகுபலி’. சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ், ராணா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், நடிகைகள் அனுஷ்கா, தமன்னா ஆகியோரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை ஆர்கா மீடியா ஒர்க்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. கடந்த 2013ம் வருடத்தின் இடையிலேயே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வருடம் படத்தை வெளியிட உள்ளனர்.

தமிழ், தெலுங்கில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் தமிழ் உரிமையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தமிழில் பல முன்னணி நடிகர்களின் படங்களை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி