அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பிரபல எழுத்தாளர் சோ ஆஸ்பத்திரியில் அனுமதி!…

பிரபல எழுத்தாளர் சோ ஆஸ்பத்திரியில் அனுமதி!…

பிரபல எழுத்தாளர் சோ ஆஸ்பத்திரியில் அனுமதி!… post thumbnail image
சென்னை:-பிரபல எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான பத்திரிகையாளர் சோ ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார்.நேற்று இவர் வீட்டில் இருந்த போது நள்ளிரவு 1.30 மணி அளவில் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. சளி தொல்லையாலும் அவதிப்பட்டார்.

இதையடுத்து உடனடியாக அவர் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லப்பட்டார். நள்ளிரவு 1.45 மணி அளவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சோவுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று காலையில் மீண்டும் அவரது உடல் நிலையை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். மூச்சுத்திணறல் நோயை குணப்படுத்த ஒரு வாரம் வரை சோ சிகிச்சை பெற வாய்ப்பு இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று காலையில் சோவுக்கு மூச்சுத்திணறலை குணப்படுத்துவதற்கான அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். உடல் நிலை தேறிய பின்னர் சாதாரண வார்டுக்கு சோ மாற்றப்படுகிறார். அதன் பின்னரே டாக்டர்களின் அறிவுரையின் பேரில் அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி