செய்திகள்,விளையாட்டு முத்தரப்பு தொடர்: 153 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி!…

முத்தரப்பு தொடர்: 153 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி!…

முத்தரப்பு தொடர்: 153 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி!… post thumbnail image
பிரிஸ்பேன்:-ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய 3 நாடுகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. முத்தரப்பு போட்டி தொடரின் 3-வது லீக் ஆட்டம் பிரிஸ்பேனில் இன்று நடக்கிறது. ஆட்டம் தொடங்கியதும், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான் ஒரு ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து களம் இறங்கிய ராயுடு, ரெகானேவுடன் கைகோர்த்து விளையாடினார். 13 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. 17 ரன்களுடனும், ரெகானே 32 ரன்களுடனும் விளையாடினர்.

இருவரும் நிதானமாக ஆடிய நிலையில் ரெகானே, பின் பந்துவீச்சில் டெய்லரிடம் கேட்ச் கொடுத்து 33 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் கோலியும், 4 ரன்களில் அவுட் ஆனார். ரெய்னாவும் ஒரு ரன்னில் அவுட் ஆனார். டோனி 34 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்திய அணி தொடர்ந்து விக்கெட் சரிவை சந்தித்தது. இந்திய அணி வீரர்களின் சொதப்பலான ஆட்டத்தினால், 39.3 ஓவர்களிலே அனைத்து விக்கெட்களும் பறிபோனது. இந்திய அணி 39.3 ஓவர்களின் அனைத்து விக்கெட்களையும், இழந்து 153 ரன்களில் சுருண்டது. அணியில் அதிகபட்சமாக பின்னி 44 ரன்கள் எடுத்தார். ஆண்டர்சன், பின் பந்துவீச்சில் இந்திய அணியின் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வந்தது. ஆண்டர்சன் 4 விக்கெட்டையும், பின் 5 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி