அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் சசி தரூரிடம் விரைவில் விசாரணை!…

சசி தரூரிடம் விரைவில் விசாரணை!…

சசி தரூரிடம் விரைவில் விசாரணை!… post thumbnail image
புதுடெல்லி:-முன்னாள் மத்திய மந்திரியும், திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை மர்ம மரணமாக பதிவு செய்து டெல்லி போலீசார் விசாரித்து வந்தனர். இது குறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ். பஸ்சி கூறியதாவது:-

சசிதரூர் தற்போது டெல்லிக்கு வந்திருப்பது எனக்கு தெரியும். இந்த வழக்கு தொடர்பாக அடுத்த 2 நாட்களில் அவரிடம் விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளது. இந்த வழக்கில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், சிறப்பு விசாரணைக் குழுவினர் சசி தரூரிடம் விசாரணை நடத்துவர். அதைப்போல தேவை ஏற்பட்டால் சசி தரூரின் பாகிஸ்தான் தோழி மெஹர் தராரிடம் விசாரணை நடத்துவதை தவிர்க்க முடியாது.

ஒரு வழக்கை விசாரிக்கும் போது, அது குறித்த பின்புலம் மற்றும் அனைத்து சூழ்நிலைகளும் ஆய்வு செய்யப்படும். எனவே சுனந்தா வழக்கில் ஐ.பி.எல். விவகாரங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் விசாரணையின் போது கருத்தில் கொள்ளப்படும். இந்த வழக்கில் ஒவ்வொரு நடவடிக்கையையும் நாங்கள் வெளிப்படையாகவே மேற்கொள்கிறோம். ஏனெனில், எங்கள் பணிகள் அனைத்தையும் அரசும், நீதித்துறையும் கண்காணித்து வருகிறது. எனவே இதில் நாங்கள் எந்த தவறும் மேற்கொள்ள முடியாது. இவ்வாறு பி.எஸ்.பஸ்சி கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி