செய்திகள்,திரையுலகம் நடிகை ஆன்ட்ரியாவின் முதல் அனுபவம்!…

நடிகை ஆன்ட்ரியாவின் முதல் அனுபவம்!…

நடிகை ஆன்ட்ரியாவின் முதல் அனுபவம்!… post thumbnail image
சென்னை:-நடிகையாகவும், பின்னணிப் பாடகியாகவும் உள்ள ஆன்ட்ரியா இதுவரை நடித்துள்ள படங்களில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராகத்தான் நடித்துள்ளார். முதல் முறையாக வலியவன் படத்தில் தனி கதாநாயகியாக நடித்துள்ளார். எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் ஜெய் நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் அடுத்த மாதம் வெளிவர உள்ளது.

இந்தப் படத்தைப் பற்றி நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஆன்ட்ரியா பேசியதாவது, நிறைய பேர் வந்து இந்தப் படத்துலதான் நான் சிங்கிள் ஹீரோயின்னு சொல்றாங்க. ஆமாம், இதுதான் முதல் முறை. சரவணன் சார் கூட முதல் முறையா வொர்க் பண்றன். ஜெய் கூட முதல் முறையாக வொர்க் பண்றன். நான் நடிக்கிற படத்துக்கு முதல் முறையா இமான் சார் மியூசிக் பண்றாரு. முதல் முறை ஒரு சீரியஸ் ரோல்ல நடிக்காம ஒரு ஜாலியான ரோல் நான் பண்றன்.

முதல் முறையா நான் கார் எல்லாம் படத்துல ஓட்டுறேன். நிஜ வாழ்க்கையில இதுவரைக்கும் நான் கார் ஓட்டினதில்லை. இந்தப் படத்துல நிறைய முதல் முறை விஷயங்கள் நடக்குது. இந்தப் படத்துல நடிச்சது நல்ல அனுபவம். அதுக்காக எல்லாருக்கும் நன்றி, நீங்க எல்லாரும் படத்தைப் பார்த்து ரசிக்கணும், நன்றி, என தனது முதல் முறை அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி