செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலக கோப்பைக்கு தேர்வான கிரிக்கெட் வீரர் கற்பழிப்பு வழக்கில் சிறையில் அடைப்பு!…

உலக கோப்பைக்கு தேர்வான கிரிக்கெட் வீரர் கற்பழிப்பு வழக்கில் சிறையில் அடைப்பு!…

உலக கோப்பைக்கு தேர்வான கிரிக்கெட் வீரர் கற்பழிப்பு வழக்கில் சிறையில் அடைப்பு!… post thumbnail image
டாக்கா:-வங்காள தேச கிரிக்கெட் வீர ருபல் ஹூசைன் ( வயது 24) வேகப்பந்து வீச்சாளர். இவர் 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியா- நியூசிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட வங்காளதேச அணி சார்பில் தேர்வு செய்யபட்டு உள்ளார்.

வங்காள தேச நடிகை நஸ்னின் அக்தர் ஹேப்பி( வயது 19). இவர் ஆசா போல பாசா என்ற படத்தில் நடித்து உள்ளார். ஹேப்பியும் – ஹூசைனும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் ஹூசைன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி கற்பழித்து விட்டதாக புகார் கூறினார். இதை தொடர்ந்து ஹூசைன் கைது செய்யபட்டார். கைது செய்யபட்ட ஹூசைன் டாக்கா மாநகர கோர்ட்டில் ஆஜர் படுத்தபட்டார். நீதிபதி ஹூசைனின் ஜாமீன் மனுவை நிராகரித்தார். அடுத்த விசாரணை வரை அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டு உள்ளார். மாநகர கோர்ட் நடிகை மற்றும் ஹுசைனுக்கு மருத்துவபரிசோதனை மற்றும் டிஎன்ஏ சோதனை நடத்த உத்தரவிட்டு உள்ளது. என டாக்கா போலீஸ் கமிஷனர் அனிசூர் ரஹ்மான் தெரிவித்தார்.

வழக்கை வாபஸ் வாங்க போவதாகவும் ஹூசைன் தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதித்து உள்ளதாகவும் ஹேப்பி நிருபர்களிடம் தெரிவித்து உள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஹூசைன் கற்பழிப்பு மற்றும் ஒரு திருமண செய்யும் குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் – தன்னை ஹேப்பி பிளாக் மெயில் செய்வதாகும், தான் ஒரு நடிகையை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி