செய்திகள்,தொழில்நுட்பம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் மும்பை ஏர் இந்தியா அலுவலகத்திற்கு விமானத்தை கடத்தப்போவதாக தொலைபேசியில் மிரட்டல்!…

மும்பை ஏர் இந்தியா அலுவலகத்திற்கு விமானத்தை கடத்தப்போவதாக தொலைபேசியில் மிரட்டல்!…

மும்பை ஏர் இந்தியா அலுவலகத்திற்கு விமானத்தை கடத்தப்போவதாக தொலைபேசியில் மிரட்டல்!… post thumbnail image
மும்பை:-கடந்த 3ம் தேதி கொல்கத்தா ஏர் இந்தியா அலுவலகத்திற்கு மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்மநபர், இந்திய விமானத்தை கடத்தப்போவதாக கூறிவிட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டார். இதை தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள முக்கிய விமான நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து அனைத்து விமான நிலையங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த தொலைபேசி மிரட்டல் காரணமாக நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் மும்பையில் உள்ள ஏர் இந்தியா விமான அலுவலகத்திற்கு மர்ம அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம நபர் இந்திய விமானத்தை கடத்தவோ அல்லது வெடிக்க வைக்கவோ செய்வோம் என்று கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.

தொடர்ந்து விமான கடத்தல் குறித்த மிரட்டல் அழைப்புகள் வருவதால் மும்பை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொலைபேசியில் மிரட்டல் விடுத்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி