அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் – சசிதரூர்!…

போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் – சசிதரூர்!…

போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் – சசிதரூர்!… post thumbnail image
புது டெல்லி:-சுனந்தா புஷ்கர் சாவு கொலை வழக்காக மாற்றப்பட்ட தகவல் அறிந்து சசிதரூர் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:– எனது மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரிக்கப்போவதாக டெல்லி போலீசார் அறிவித்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த வழக்கில் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை.

சுனந்தாவின் மருத்துவ அறிக்கை எனக்கு இன்னும் தரப்படவில்லை. தடயவியல் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையும் கிடைக்கவில்லை. என்றாலும் நான் போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி