செய்திகள் திருமணமான பெண்ணை கற்பழித்த 54 வயது பிரம்மச்சாரி!…

திருமணமான பெண்ணை கற்பழித்த 54 வயது பிரம்மச்சாரி!…

திருமணமான பெண்ணை கற்பழித்த 54 வயது பிரம்மச்சாரி!… post thumbnail image
மும்பை:-மராட்டிய மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள அம்பாடி நாகா பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் பாட்டீல்(54). விவசாயியான இவர் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு சொந்தமாக சில விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலத்தில் கூலி வேலை செய்து வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் மகளுக்கு அவ்வப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வேதனையால் தவித்த அந்த தாய்க்கு அடிக்கடி ஆறுதல் கூறிவந்த பிரபாகர் பாட்டீல், அந்த சிறுமியின் சிகிச்சைக்கு உதவுவதாக வாக்குறுதி அளித்தார்.

இதையே காரணமாக வைத்து, அந்த பெண்ணை தனது வீட்டுக்கு வரவழைத்து கற்பழித்த அவர், இதையே வாடிக்கையாக்கி கொண்டார். இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் உன்னையும் உன் கணவன் மற்றும் மகளையும் தீர்த்துக்கட்டி விடுவேன் என்று மிரட்டியே கடந்த 3 மாத காலமாக அந்தப்பெண்ணை துன்புறுத்தியுள்ளார். இனியும் இவரது மிரட்டலுக்கு பயந்து கொண்டிருந்தால் வி‌ஷயம் மேலும் விபரீதமாகி விடும் என்பதை உணர்ந்த அந்த பெண் அளித்த புகாரின் பேரில் பிரபாகர் பாட்டீலை நேற்றிரவு கைது செய்த போலீசார், குற்றப்பிரிவு 376, 341, 324, 506 ஆகியவற்றின்கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி