செய்திகள்,திரையுலகம் 2015ல் மீண்டும் துவங்குகிறது ‘மருதநாயகம்’ திரைப்படம்!…

2015ல் மீண்டும் துவங்குகிறது ‘மருதநாயகம்’ திரைப்படம்!…

2015ல் மீண்டும் துவங்குகிறது ‘மருதநாயகம்’ திரைப்படம்!… post thumbnail image
சென்னை:-நிதி சிக்கலால் கிடப்பில் போடப்பட்ட கமலின், மருதநாயகம் படம், 2015ம் ஆண்டு மீண்டும் உயிர் பெற இருக்கிறது. கமல்ஹாசனின் கனவு படம் மருதநாயகம். 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த போர்வீரர், முகமது யூசப் கானின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. 1997-ம் ஆண்டு இங்கிலாந்து ராணி எலிசபத், இந்தியா வந்து மருதநாயகம் படத்தை துவக்கி வைத்தார். பிரமாண்டமாய் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங், தொடர்ந்து நடந்து வந்த நிலையில் நிதி சிக்கல் காரணமாக ஒருக்கட்டத்தில் இப்படம் கிடப்பில் போடப்பட்டது.

மருதநாயகம் படத்தை புதுப்பிக்க கமல் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். மருதநாயகம் படத்தின் வேலைகள் எப்போது வேண்டுமானாலும் துவங்கலாம். இந்தப் படத்தை இப்போது தயாரிக்க நிச்சயமாக 100 கோடி தேவைப்படும். நான் சொல்வது உண்மையிலேயே 100 கோடி. மருதநாயகம் படத் தயாரிப்புக்கு பணம் மட்டும் ஒரு பிரச்சனையல்ல. படத்தை உலகம் முழுக்க கொண்டு சேர்க்க பவர்ஃபுல்லான ஒரு டிஸ்ட்ரிப்யூஷன் நெட்வொர்க் தேவை. அதற்கான ஆட்கள் வரவேண்டும் என்று கூறியிருந்தார் கமல்.

இந்நிலையில், சமீபகாலமாக இந்தியாவிலும் ரூ.100 கோடிக்கு மேலான பட்ஜெட்டில் படங்கள் உருவாக தொடங்கியுள்ளன. அதன்காரணமாக கமலுக்கும் தனது மருதநாயகம் படத்தை மீண்டும் புதுப்பிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்ததுள்ளது. இதற்கிடையே சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்த கமல், மருதநாயகம் படம் 2015ம் ஆண்டு துவங்கும் என்று கூறியிருக்கிறார். மருதநாயகம் படத்தை, லண்டனை சேர்ந்த தொழிலதிபரும், கமலின் நண்பருமான ஒருவர் தயாரிக்க முன்வந்திருப்பதாக லேட்டஸ்ட் தகவல்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி