செய்திகள் 6 ஆண்டுகளாக சம்பளம் கிடைக்காமல் சவுதியில் தவிக்கும் இந்திய பெண்!…

6 ஆண்டுகளாக சம்பளம் கிடைக்காமல் சவுதியில் தவிக்கும் இந்திய பெண்!…

6 ஆண்டுகளாக சம்பளம் கிடைக்காமல் சவுதியில் தவிக்கும் இந்திய பெண்!… post thumbnail image
ரியாத்:-கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷாம்சம்மா என்ற பெண், வீட்டு வேலைக்காக தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு 900 சவுதி ரியால்கள் (240 டாலர்) மாதச்சம்பளம் தருவதாக கூறப்பட்டது. ஆனால், அங்கு வீட்டில் வேலைக்காக ஒப்படைக்கப்பட்டதும் அவருக்கு 700 ரியால்கள் மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டது. அதுவும் முதல் 4 மாதங்களுக்கு மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் அவரது வீட்டு உரிமையாளர் சம்பளம் கொடுக்க மறுத்ததுடன் அரசின் நலவாழ்வு மையத்தில் அவரை கட்டாயப்படுத்தி தங்க வைத்துள்ளார். அவர் வேறு யாரிடமும் பேசவோ, தொடர்பு கொள்ளவோ அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், கடும் கண்காணிப்பையும் மீறி கடந்த 2 மாதங்களுக்கு கேரளாவைச் சேர்ந்த ஒருவரை சந்திக்க ஷாம்சம்மாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது, அவர் கொடுத்த ஆலோசனைப்படி, தனது உறவினர் மூலம் இந்திய தூதரகத்திடம் புகார் அளித்துள்ளார். பின்னர் தூதரக அதிகாரிகள், உள்ளூர் போலீசாரின் உதவியுடன் ஷாம்சம்மா இருக்குமிடத்தை அறிந்து, அவருக்கு சேரவேண்டிய சம்பள பாக்கியை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்தனர்.

தூதரகம் தலையிட்டதையடுத்து வீட்டு உரிமையாளர், அந்த பெண்ணுக்கு வழங்க வேண்டிய 33 ஆயிரம் ரியால்களை (8792 டாலர்) வழங்க ஒப்புக்கொண்டார். இதற்காக 3 வாரங்கள் அவகாசம் கேட்டுள்ளதாக அரபு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், 3 வாரங்கள் கடந்த பிறகும் வீட்டு உரிமையாளர் கூறியபடி பணத்தை கொடுக்கவில்லை என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. எனினும், தூதரகம் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும், ஷாம்சம்மா விரைவில் தனது சம்பளத் தொகையை பெற்றுக்கொண்டு நாடு திரும்புவார் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி