செய்திகள்,திரையுலகம் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ பாடல்கள் டிசம்பர் 31 நள்ளிரவில் ரிலீஸ்!…

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ பாடல்கள் டிசம்பர் 31 நள்ளிரவில் ரிலீஸ்!…

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ பாடல்கள் டிசம்பர் 31 நள்ளிரவில் ரிலீஸ்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜீத் நடிப்பில் தற்போது திரைக்கு வர காத்திருக்கும் படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

டீசரை பார்த்த அனைவரும் படத்தின் பாடல்கள் மற்றும் படம் எப்போது திரைக்கு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ‘என்னை அறிந்தால்’ படத்தின் பாடல்களை டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவில் வெளியிட உள்ளனர். இதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ சாய் ராம் கிரியேசன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி