செய்திகள்,திரையுலகம் நான் என்னையே இழந்ததாக உணர்கிறேன் – ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

நான் என்னையே இழந்ததாக உணர்கிறேன் – ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

நான் என்னையே இழந்ததாக உணர்கிறேன் – ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!… post thumbnail image
சென்னை:-பாலசந்தரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்று இரவு 9.45 மணியளவில் ரஜினிகாந்த், பாலசந்தரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். வெகுநேரம் பாலசந்தரின் உடலுக்கு அருகே அமைதியாக அமர்ந்திருந்தார். பின்னர், 10.30 மணியளவில் வெளியில் காத்திருந்த செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் பேசியதாவது:

இயக்குநர் பாலசந்தர் எனது குரு மட்டுமல்ல. எனக்கு தகப்பன் போன்றவர். என்னை அவர் நடிகனாகப் பார்க்கவில்லை. மகனாகப் பார்த்தார். அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று. என்னை நானே இழந்து விட்டதாக உணர வைத்து விட்டது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றார் ரஜினிகாந்த்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி