செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் வெள்ளி கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்த நாசா திட்டம்!…

வெள்ளி கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்த நாசா திட்டம்!…

வெள்ளி கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்த நாசா திட்டம்!… post thumbnail image
வாஷிங்டன்:-விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவின் ‘நாசா’ மையம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. தற்போது செவ்வாய் கிரகத்துக்கு விண்கலன்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டுள்ளது. அங்கு 2024–ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிரந்தரமாக குடியமர்த்த ஆய்வு செய்து வருகிறது. விண்வெளிக்கு ‘ஹெப்லர்’ விண்கலத்தை அனுப்பி புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திர கூட்டங்களை கண்டுபிடித்து வருகிறது.

இந்நிலையில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்பு வெள்ளி கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ‘நாசா’ திட்டமிட்டுள்ளது. அங்கு மனிதர்களை குடியமர்த்தவும் முடிவு செய்துள்ளது. ஏனெனில் வெள்ளி கிரகத்தின் மேற்பரப்பு பூமியை போன்று உள்ளது. அதன் 50 கி.மீட்டர் தூரத்துக்கு பூமியில் இருப்பது போன்ற சூழ்நிலை நிலவுகிறது. அதே நேரத்தில் புவிஈர்ப்பு சக்தி மட்டும் பூமியைவிட சற்று குறைவாக உள்ளது. மேலும் சூரியன் தனது சூரிய சக்தி பூமியை விட 40 சதவீதம் அதிகமாக உள்ளது. இதற்கான ஆய்வை விர்ஜீனியாவில் உள்ள விண்வெளி ஆய்வு மைய நிபுணர்கள் டேல் ஆர்னே, கிறிஸ் ஜோன்ஸ் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

தொடக்கத்தில் ‘ரோபோ’வை அனுப்ப திட்டமிட்டுள்ளனர். அந்த ஆய்வுக்கு பின்னர் மனிதர்களை அனுப்பி வெள்ளி கிரக சுற்றுப்பாதையில் 30 நாட்கள் தங்கியிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் அங்கு 2 பேர் குழு ஒரு வருடம் தங்கியிருந்து மனிதர்கள் நிரந்தரமாக தங்கும் வகையில் ஏற்பாடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக சூரிய சக்தியில் இயங்கும் விண்கலன்களை அனுப்பி வெள்ளி கிரக சுற்றுச்சூழலை ஆய்வு செய்யவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி