லண்டன்:-உலக கோப்பை கிரிக்கெட் 2015-க்கான தூதராக சச்சின் டெண்டுல்கரை நியமித்து ஐ.சி.சி. அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியின் போதும் சச்சின் தான் தூதராக இருந்தார். தற்போது இரண்டாவது முறையாக அவர் தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இப்பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள சச்சின், உலக கோப்பை 2015-க்கான ஐ.சி.சி.யின் முயற்சிகளை ஊக்குவித்து அதற்கு உறுதிணையாகவும் இருப்பார். உலகின் மூன்றாவது பெரிய விளையாட்டு நிகழ்ச்சியான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி துவங்கி மார்ச் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி