அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது வழங்க எல்.கே.அத்வானி வலியுறுத்தல்!…

வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது வழங்க எல்.கே.அத்வானி வலியுறுத்தல்!…

வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது வழங்க எல்.கே.அத்வானி வலியுறுத்தல்!… post thumbnail image
புதுடெல்லி:-பாரதீய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– வாஜ்பாய் இந்த நாட்டின் முன்மாதிரியாக திகழ்ந்தார். தனது பணி மூலம் அனைத்தையும் நிறைவடைய செய்தவர் ஆவார். பாரதரத்னா விருதுக்கு அவர் அனைத்து வகையிலும் தகுதியானவர். அதற்குரிய அங்கீகாரம் அவரிடம் இருக்கிறது.

வாஜ்பாய் போன்ற தேச பக்தருக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்டால் அது பொருத்தமாக இருக்கும். தற்போதைய அரசு அவரது பிறந்த நாளை சிறந்த ஆளுமை தினமாக கடைப்பிடிப்பது குறிப்பிடத்தக்கதாகும். மத்தியில் கூட்டணி ஆட்சி சகாப்தம் முடிந்து விட்டதாக கூற இயலாது. இந்தியா போன்ற மாறுபட்ட தன்மைகள் கொண்ட நாட்டில் மீண்டும் கூட்டணி அரசு அமைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி