செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் மரணம்!…

விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் மரணம்!…

விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் மரணம்!… post thumbnail image
சென்னை:-விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் (வயது 79) சென்னையில் நேற்று மாரடைப்பால் காலமானார். இவர் 1935-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந் தேதி பிறந்தார். தனது 21 வயதிலேயே பத்திரிகை துறையில் பொறுப்பேற்று விகடன் இணை இயக்குனராக பொறுப்பேற்றார்.

தமிழ் இலக்கிய பரப்பில் முக்கியமான முயற்சியாக இப்போதும் பேசப்படும் முத்திரை கதைகள் திட்டத்தை தொடங்கியவர் இவர். ஜெயகாந்தன், சுஜாதா போன்ற பிரபலமான எழுத்தாளர்களுக்கு முதல் களம் அமைத்து கொடுத்தவர். இவர் ‘சேவற்கொடியோன்’ என்ற புனை பெயரில் பல சிறுகதைகளை எழுதி உள்ளார். இவருக்கு 6 மகள்கள் 1 மகன் உண்டு. இவரது மகன் பா.சீனிவாசன் தற்போது விகடன் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார்.

எஸ்.பாலசுப்பிரமணியத்தின் இறுதி சடங்கு சென்னையில் நடைபெற உள்ளது. எஸ்.பாலசுப்பிரமணியன் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தன்னுடையை உடலை தானம் செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அவரது உடல் 22ம் தேதி திங்கட்கிழமை காலை 6 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக போயஸ் தோட்ட இல்லத்தில் வைக்கப்படும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி