செய்திகள்,விளையாட்டு உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: அரை இறுதியில் சாய்னா நேவால்!…

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: அரை இறுதியில் சாய்னா நேவால்!…

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: அரை இறுதியில் சாய்னா நேவால்!… post thumbnail image
துபாய்:-உலகின் 8 முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் வகித்த இந்திய வீராங்கனை சாய்னா நேவால் நேற்று தனது கடைசி லீக்கில் தென் கொரியா வீராங்கனை பாவ் யோன் ஜூவை எதிர்கொண்டார்.

69 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 15-21 என்ற கணக்கில் இழந்த சாய்னா பின்னர் சுதாரித்து ஆடி அடுத்த 2 செட்களையும் 21-7, 21-17 என்ற கணக்கில் தனதாக்கி வெற்றி பெற்றார்.
இந்த போட்டி தொடரில் தொடர்ந்து 3-வது வெற்றியை பதிவு செய்த சாய்னா தனது பிரிவில் முதலிடம் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி