செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு இரண்டாவது டெஸ்ட்டில் முரளி விஜய் சதம்!…

இரண்டாவது டெஸ்ட்டில் முரளி விஜய் சதம்!…

இரண்டாவது டெஸ்ட்டில் முரளி விஜய் சதம்!… post thumbnail image
பிரிஸ்பேன்:-இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இப்போட்டிக்கான இந்திய அணியில் சாகா, கரன் சர்மா, சமி ஆகியோருக்கு பதிலாக தோனி, அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் களமிறங்கினர்

வழக்கம் போல் தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய்யும், தவானும் களமிறங்கினர். விஜய் பொறுமையை கையாள தவான் அதிரடியாக ஆடினார். இதனால் 13 ஓவரில் இந்திய அணி 50 ரன்களை கடந்தது. இந்த நிலையில் 14வது ஓவரின் போது மார்ஷ் பந்துவீச்சில் 24 ரன்களில் தவான் ஆட்டமிழந்தார். இதை தொடர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்கு புஜாரா களமிறங்கினார். தொடக்கம் முதலே பந்துகளை எதிர்கொள்ள புஜாரா சிரமப்பட்டு வந்த நிலையில் ஹாசில்வுட் வீசிய பவுன்சர் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இதனால் 4வது விக்கெட்டுக்கு கோலி களம் புகுந்தார்.

அவரும் 19 ரன்களில் ஹாசில்வுட் பந்துவீச்சில் வெளியேற மறுமுனையில் இந்திய அணியின் சுவராக நின்று முரளி விஜய் ஆடிவந்தார். அவரது இன்றைய ஆட்டம் ராகுல் டிராவிட்டின் ஆட்டத்தை நமது கண் முன் கொண்டு வந்து காட்டியது. இந்நிலையில் வாட்சன் வீசிய 56வது ஓவரில் தொடர்ந்து 2 பவுண்டரிகளை விளாசிய விஜய் தனது நான்காவது சதத்தை பூர்த்தி செய்தார். அடுத்து ஜான்சன் வீசிய 57வது ஓவரில் விஜய் கொடுத்த கேட்ச்சை ஷான் மார்ஷ் கை நழுவ விட தற்போது 115 ரன்களுடன் ஆடி வருகிறார். மறு முனையில் ரகானே 15 ரன்களுடன் ஆடிவருகிறார். இந்திய அணி 60 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்களை எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி