செய்திகள்,திரையுலகம் நடிகை மீரா நந்தனால் தூக்கத்தை தொலைத்த நடிகர் சரத்குமார்!…

நடிகை மீரா நந்தனால் தூக்கத்தை தொலைத்த நடிகர் சரத்குமார்!…

நடிகை மீரா நந்தனால் தூக்கத்தை தொலைத்த நடிகர் சரத்குமார்!… post thumbnail image
சென்னை:-நடிகர் சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் படம் ‘சண்டமாருதம். இந்த படத்தின் கதாநாயகிகளாக ஓவியா, மீரா நந்தன் இருவரும் நடிக்கிறார்கள். படத்திற்கு வசனம் எழுதி இயக்கியுள்ளார். ஏ.வெங்கடேஷ்

படம் பற்றி இயக்குனர் ஏ.வெங்கடேஷ் கூறுகையில், வித்தியாசமான ஆக்ஷன் படம் இது. இந்தப் படத்தின் கதையம்சம் பரபரப்பான சம்பவங்களை முடிச்சிப் போட்டிருக்கும். சண்டமாருதம் படத்தில் க்ளைமேக்ஸ் காட்சிகாக சரத்குமார் 32 மணிநேரம் தூங்காமல் ஓய்வே எடுக்காமல் நடித்துக் கொடுத்தார். அதற்கு காரணமே மீராநந்தன் தான். சில மாதங்களுக்கு முன்பு மீராநந்தன் துபாயில் ஒரு ரேடியோ ஸ்டேஷனில் வர்ணனையாளராக சேர்ந்து விட்டார்.

அதனால் படப்பிடிப்புகாக அந்த நிறுவனத்திடம் அனுமதி வாங்கி க்ளைமேக்ஸை முடித்தோம். அவர் அனுமதி வாங்கித் தந்த நேரத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க வேண்டுமானால் யாரும் தூங்க கூடாது. தூங்கவும் விடக்கூடாது என்று முடிவெடுத்து கஷ்டப் பட்டோம் க்ளைமேக்ஸ் முடிந்தது. அதற்கு பிறகு ராதிகாசரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் உட்பட எல்லோரும் அவரை பாராட்டி மலர் கொத்து கொடுத்து அனுப்பி வைத்தோம் என்றார் ஏ.வெங்கடேஷ்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி