அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் பிப்ரவரியில் பட்ஜெட் தாக்கல்: உயருகிறது ரெயில் கட்டணம்!…

பிப்ரவரியில் பட்ஜெட் தாக்கல்: உயருகிறது ரெயில் கட்டணம்!…

பிப்ரவரியில் பட்ஜெட் தாக்கல்: உயருகிறது ரெயில் கட்டணம்!… post thumbnail image
புதுடெல்லி:-பாராளுமன்றத்தில் வருகிற 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் ரெயில் கட்டண உயர்வு இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரெயில்வே இலாகாவில் எரிபொருள் செலவினம் கடந்த சில மாதங்களில் 4 சதவீதம் அதிகரித்து உள்ளது. எனவே கட்டண உயர்வு தவிர்க்க முடியாது என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எரிபொருள் மற்றும் எரிசக்தி செலவினங்களுக்கு ஏற்ப வருடத்துக்கு இருமுறை பயணிகள் மற்றும் சரக்கு ரெயில் கட்டணத்தை உயர்த்துவது என்று ரெயில்வே இலாகா ஏற்கனவே கொள்கை முடிவு எடுத்துள்ளது. அதன்படி கடந்த ஜூன் மாதம் சதானந்தகவுடா தாக்கல் செய்த ரெயில்வே இடைக்கால பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் 4.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 1.4 சதவீதமும் உயர்த்தப்பட்டது.
எனவே வர இருக்கும் பட்ஜெட்டில் ரெயில் கட்டணம் உயர்வு இருக்கும். இதுபற்றி ரெயில் மந்திரி சுரேஷ் பிரபு கூறுகையில், சமீப கால நிலவரங்களை வைத்து பொது மக்களும் அரசின் சுமைகளை பங்கெடுத்து கொள்ள வேண்டி வரும் என்று ரெயில் கட்டண உயர்வை சூசகமாக தெரிவித்தார்.

பயணிகளுக்கு கூடுதல் வசதி செய்து தர கட்டண உயர்வு அவசியம். இதே போல் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது. பெரிய அளவில் முதலீடு தேவைப்படுகிறது. எனவே, இதில் பொது மக்களும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று சுரேஷ் பிரபு கூறினார். சமீபத்தில் மந்திரி சுரேஷ் பிரபு எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களின் ரெயில்வே தொடர்பான கோரிக்கைகளை கேட்டார். இந்த திட்டங்களை செயல்படுத்த ரூ.20,000 கோடி தேவைப்படும் என்றும் கணக்கிடப்பட்டு உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி