செய்திகள்,திரையுலகம் இசையமைப்பாளர் இளையராஜா மீது போலீசில் புகார்!…

இசையமைப்பாளர் இளையராஜா மீது போலீசில் புகார்!…

இசையமைப்பாளர் இளையராஜா மீது போலீசில் புகார்!… post thumbnail image
சென்னை:-இசையமைப்பாளர் இளையராஜா மீது அகிமியூசிக் தலைமை நிர்வாகி அகிலன் லெட்சுமணன் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். புகார் மனுவில் கூறியிருப்பதாவது:– இளையராஜா 2007–ல் பாடல்கள் சம்பந்தமாக எங்களுடன் ஒப்பந்தம் செய்தார். ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும்போதே வேறு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டார். இதனால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் எங்கள் மீது போலீசில் பொய் புகார் அளித்துள்ளார். போலீசார் அத்துமீறி அலுவலகத்தில் நுழைந்தனர். பிற இசையமைப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் பாடல்களைகூட விற்க முடியாத வகையில் வியாபாரம் முடக்கப்பட்டு உள்ளது. பிற பட பாடல்களையும் வெளியிட முடியாமல் தடுக்கிறார். அம்புலி, மாலுமி, தாண்டவக்கோனே, ஆ.ஆ.ஆ.ஆ., செங்காத்து பூமியிலே சிறு பட்ஜெட் படதயாரிப்பாளர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் பாடல்களை வெளியிட்டு ஆதரவு அளித்து வரும் எங்களை களங்கப்படுத்துகிறார்.இன்டர்நெட்டில் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் கொலை மிரட்டல்களும் விடுக்கின்றனர். இப்பிரச்சினையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி