இந்நிலையில், அனாமிகா படத்தில் நடித்த பிறகு நயன்தாராவை ஆக்சன் ஹீரோயினியாக்கும் முயற்சியில் சில டைரக்டர்கள் முன்வந்துள்ளனர். அதில் டைரக்டர் ஜெயம் ராஜா தனது தம்பி ஜெயம்ரவியை வைத்து இயக்கி வரும் தனி ஒருவன் படத்தில் நயன்தாரா ஆக்சன் ஹீரோயினியாக்கியிருக்கிறார். படத்தில் அவருக்கு சண்டை காட்சியும் உளளதாம். அதைப்பார்த்து, தற்போது நயன்தாராவை லேடி சூப்பர் ஸடார் என்று கூறியுள்ளார் உதயநிதி.
அவருடன் இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா எனற் இரண்டு படங்களில் நடித்தபோதும் அவர் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகை என்பதை தெரிந்து கொண்டேன் என்று தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார் உதயநிதி. இந்த சேதி வெளியானதை அடுத்து, நயன்தாராவுக்கு நெருக்கமான சில நடிகர்கள் எஸ்எம்எஸ் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி