இதன் பின்னர் இந்திய அணி அடிபட்ட வேங்கை போல வெகுண்டெழுந்து ஆக்ரோஷமுடனும், துடிப்புடனும் செயல்பட்டது. இதன் பலனாக 18-வது நிமிடத்தில் இந்திய அணி முதல் பதில் கோலை திருப்பியது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ரூபிந்தர் பால்சிங் இந்த கோலை போட்டார். 27-வது நிமிடத்தில் இந்தியாவின் எஸ்.கே.உத்தப்பா கோல் அடிக்க, ஆட்டத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது.தொடர்ந்து இந்திய வீரர்கள் ஆகாஷ்தீப்சிங் 41-வது நிமிடத்திலும், தரம்விர்சிங் 49-வது நிமிடத்திலும் கோல் அடித்து ரசிகர்களை குதூகலப்படுத்தினார்கள். முடிவில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை சாய்த்து அரை இறுதிக்குள் நுழைந்தது.நாளை நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் ஜெர்மனி-ஆஸ்திரேலியா, இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி