சென்னை:-இந்திய மாநிலம் உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஒரு கட்சியின் பொதுச்செயலாளர், சினிமாவில் பணத்திற்காக அரை குறை உடை அணிந்து ஆடும் பெண் நடிகைகள் விபசாரத்திற்கு சமமானவர்கள் என்று கூறியுள்ளார்.
இதனை கண்டித்து பல மகளிர் குழுக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகைகளுக்கு ஒரு அவமரியாதை என்றால் நான் ஒதுங்கி விட மாட்டேன் என்று குரல் எழுப்பிவரும் நடிகை குஷ்பு பெண்களை மதிக்க தெரியாதவர்கள் தான் அவர்களை பற்றி தரக்குறைவாக பேசுவார்கள் என்று தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி