செய்திகள்,திரையுலகம்,விளையாட்டு வீராட் கோலியுடன் காதல்: நடிகை அனுஷ்கா ஒப்புதல்!…

வீராட் கோலியுடன் காதல்: நடிகை அனுஷ்கா ஒப்புதல்!…

வீராட் கோலியுடன் காதல்: நடிகை அனுஷ்கா ஒப்புதல்!… post thumbnail image
மும்பை:-இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ் மேன்களில் ஒருவர் வீராட் கோலி. இவருக்கும் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. கடந்த 1 ஆண்டுக்கு மேலாக இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்தனர்.இருவருக்கும் உள்ள காதலை கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீராட்கோலி ஒப்புக்கொண்டார். இதற்கிடையே வீராட் கோலியுடன் உள்ள காதலை நடிகை அனுஷ்கா சர்மாவும் ஒப்புக்கொண்டு உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–

எனக்கும், வீராட் கோலிக்கும் உள்ள உறவை மறைப்பதற்கு ஒன்றுமில்லை. நாங்கள் எங்கள் வாழ்க்கையை மிகவும் இயல்பாக வாழ்ந்து வருகிறோம்.எங்களுக்குள் இருக்கும் உறவை பற்றி யாரும் பேசுவதை விரும்பவில்லை. அது பொழுது போக்கான செய்தி கிடையாது. நாங்கள் ஒன்றாக செல்வதை மறைக்கவில்லை. ஆனால் நாங்கள் அதுபற்றி பேசமாட்டோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி