செய்திகள்,திரையுலகம் இயக்குனர் சுந்தர்.சியை துரத்துகிறது அரண்மனை பேய்!…

இயக்குனர் சுந்தர்.சியை துரத்துகிறது அரண்மனை பேய்!…

இயக்குனர் சுந்தர்.சியை துரத்துகிறது அரண்மனை பேய்!… post thumbnail image
சென்னை:-‘அரண்மனை’ பேய் படத்தை எடுத்துவிட்டு ‘ஆம்பள’ படத்தை இயக்கச் சென்றுவிட்டார் இயக்குனர் சுந்தர்.சி. ஆனால் இப்போது அந்த பேய் கதை அவரை விடாமல் துரத்துகிறது. ரஜினிகாந்த், விஜயகுமார், லதா நடித்த படம் ‘ஆயிரம் ஜென்மங்கள்’. கடந்த 1978ம் ஆண்டு திரைக்கு வந்தது. அப்படத்தை எம்.முத்துராமன் என்பவர் தயாரித்தார். சமீபத்தில் அவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஒரு புகார் அளித்தார்.

அதில், அரண்மனை படத்தை ஆயிரம் ஜென்மங்கள் படத்தை அடிப்படையாக வைத்து சுந்தர்.சி. உருவாக்கினார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது அதற்கு ஈடாக எனக்கு ரூ.50 லட்சம் தருவதாக கூறினார். தெலுங்கு, கன்னட பதிப்பிலும் வெளியிட்டால் பங்கு தருவதாக கூறி இருந்தார். ஆனால் சொன்னபடி எனக்கு பணம் தரவில்லை. ஆயிரம் ஜென்மங்கள் படத்தை தெலுங்கு, இந்தியில் நான் ரீமேக் செய்யவிருந்தேன். சுந்தர்.சி. ரூ.50 லட்சம் தருவதாக கூறியதால் நான் ரீமேக் எண்ணத்தை கைவிட்டுவிட்டேன். இப்பிரச்னையை சுமுகமாக தீர்த்து வைக்க வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி