செய்திகள் தென் ஆப்பிரிக்காவில் மண்டேலாவின் முதலாமாண்டு நினைவஞ்சலி!…

தென் ஆப்பிரிக்காவில் மண்டேலாவின் முதலாமாண்டு நினைவஞ்சலி!…

தென் ஆப்பிரிக்காவில் மண்டேலாவின் முதலாமாண்டு நினைவஞ்சலி!… post thumbnail image
ஜோகன்னஸ்பர்க்:-மடிபா என்று தென் ஆப்பிரிக்கர்களால் அன்போடு அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்கத் தலைவர் மண்டேலா மறைந்து, நேற்று ஒரு வருடம் நிறைவடைந்ததை அடுத்து, உலகெங்கும் உள்ள பலதரப்பட்ட மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் இறந்த ஜோகன்னஸ்பர்க் நகரில் வவுஜியல்ஸ் எனப்படும் பாரம்பரிய வெடியை வெடித்தும், ஒரு கிரிக்கெட் போட்டியின் மூலமும், நிறவெறி எதிர்ப்பு நாயகன் மண்டேலாவுக்கு அந்நாட்டு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரிட்டோரியா நகரின் சுதந்திர பார்க் கட்டிடத்தில், நடந்த மத நல்லிணக்க நிகழ்வுகள் அனைத்தும் நாட்டின் விடுதலைக்காக போராடிய மாவீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. விழாவில், பழங்குடித்தலைவர் ரோன் மார்ட்டின், இருபது வருட ஜனநாயக ஆட்சி நாட்டின் முதல் பிரதமரான மண்டேலாவால்தான் சாத்தியமானதாகக் குறிப்பிட்டார்.மண்டேலாவின் உருவச் சிலைக்கு அவரது மனைவி கிரேசா மிக்கேல் மலரஞ்சலி செலுத்தினார். முன்னதாக அவர் பேசுகையில்,

அழிந்தது அவரது உடல் மட்டுமே, அவரது ஆன்மா என்றும் அழியாது, இறுதி வரை நிலைத்திருக்கும் என்று உருக்கமாக கூறினார். அதன்பின்னர், மண்டேலாவின் 67 ஆண்டு பொது சேவையை கவுரவிக்கும் வகையில், 3 நிமிடம் 7 வினாடிகள் விதவிதமான வாத்தியங்களை முழங்கியும், பாரம்பரிய வெடிகளை வெடித்தும், அதைத் தொடர்ந்து 3 நிமிடம் மவுனமாக அஞ்சலி செலுத்தியும், ஒட்டு மொத்தமாக 6 நிமிடம் 7 வினாடிகள், அவரை நினைவுபடுத்தி, அவரது நினைவு நாள் நெகிழ்ச்சியோடு முடிந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி