செய்திகள்,திரையுலகம் திருமண ஆசை காட்டி நடிகை கற்பழிப்பு: பிரபல டி.வி. நடிகர் கைது!…

திருமண ஆசை காட்டி நடிகை கற்பழிப்பு: பிரபல டி.வி. நடிகர் கைது!…

திருமண ஆசை காட்டி நடிகை கற்பழிப்பு: பிரபல டி.வி. நடிகர் கைது!… post thumbnail image
மும்பை:-இந்தி, தெலுங்கில் முன்னணி டெலிவிஷன் நடிகராக இருப்பவர் அவான் குமார். நிறைய டி.வி. தொடங்களில் நடித்துள்ளார். இவர் மீது சக நடிகை ஒருவர் போலீசில் கற்பழிப்பு புகார் அளித்தார். அவான் குமார் தன்னுடன் நெருக்கமாக பழகினார் என்றும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தன்னை கற்பழித்து விட்டார் என்றும் புகார் மனுவில் குறிப்பிட்டு உள்ளார். அவானால் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவான்குமாரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அவான் நிறைய பெண்களை இதுபோல் ஏமாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, மணீத் நிறைய பெண்களுடன் தொடர்பு வைத்து இருந்தது தெரிய வந்துள்ளது. எல்லோரிடமும் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார். கற்பழிப்பு குற்றங்களிலும் ஈடுபட்டு உள்ளார் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி