செய்திகள்,திரையுலகம் குட்டை பாவாடையுடன் கவர்ச்சியாக நடித்த நடிகையை கன்னத்தில் அறைந்த ரசிகர்!…

குட்டை பாவாடையுடன் கவர்ச்சியாக நடித்த நடிகையை கன்னத்தில் அறைந்த ரசிகர்!…

குட்டை பாவாடையுடன் கவர்ச்சியாக நடித்த நடிகையை கன்னத்தில் அறைந்த ரசிகர்!… post thumbnail image
மும்பை:-பாலிவுட் நடிகை கவ்கர்கான். மும்பையைச் சேர்ந்த இவர் மாடல் அழகியாக இருந்து சினிமாவுக்குள் நுழைந்தவர். 2003ம் ஆண்டில் இருந்து இவர் நடித்து வருகிறார். டெலிவிஷன் நிகழ்ச்சிகளிலும் அவர் நடித்து வருகிறார். மும்பையில் நேற்று இரவு பிலிம்சிட்டியில் நடந்த டெலிவிஷன் ஷோ சூட்டிங்கில் நடிகை கவ்கர்கான் கலந்து கொண்டார். அவர் குட்டை பாவாடையுடன் கவர்ச்சியாக ஆடை அணிந்து நடித்துக் கொண்டு இருந்தார்.

இந்த ரியாலிட்டி ஷோவை ஏராளமான ரசிகர்கள் பார்த்துக் கொண்டு இருந்தனர். சூட்டிங்கை பார்த்துக் கொண்டு இருந்த முகமது அதில் மாலிக் என்ற ரசிகர் திடீரென நடிகையின் கன்னத்தில் அறைந்தார். அவர் குட்டை பாவாடையுடன் கவர்ச்சியாக உடை அணிந்து நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அடித்ததாக கூறினார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு வீரர்கள் அவரை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். படப்பிடிப்பு குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, நடிகை ஆடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த ரசிகர் கன்னத்தில் அறைந்தார். நடிகையை தொடவும் முயன்றார் என்றார். இதனால் அந்த ரசிகர் மீது மானபங்க படுத்துதல் மற்றும் தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுகளில் வழக்குப்பதிவு செய்யலாம் என்று தெரிகிறது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி