செய்திகள் ஓடும் பேருந்தில் கேலி செய்த வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்த சகோதரிகள்!…

ஓடும் பேருந்தில் கேலி செய்த வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்த சகோதரிகள்!…

ஓடும் பேருந்தில் கேலி செய்த வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்த சகோதரிகள்!… post thumbnail image
சண்டிகார்:-அரியானா மாநிலம் ரோதக்கில் இருந்து டெல்லிக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 3 வாலிபர்கள் உள்பட பல பயணிகள் கொண்டிருந்தனர். அதே பேருந்தில் 2 சகோதரிகளும் பயணம் செய்தனர். அந்த 3 வாலிபர்களும் சகோதிரிகளை கேலி கிண்டல் செய்துள்ளனர். ஒரு கட்டத்திற்குமேல் கிண்டல் அதிகமாகவே, பொறுமையிழந்த சகோதரிகள் மூன்று வாலிபர்களை தாங்கள் அணிந்திருந்த பெல்டை கழற்றி தர்ம அடி கொடுத்துள்ளனர்.

வாலிபர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். வாலிபர்கள் தாக்குதலை மீறி சகோதிரிகள் தர்ம அடி கொடுத்தனர். இந்த காட்சி வீடியோ மூலம் அனைத்து மீடியாக்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அரியானா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவ்வளவும் நடைபெற்றபொழுதும், பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் யாரும் இந்த அவலத்தை தட்டு கேட்க முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி