செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான இடத்தில் விபசாரம்!…3 பெண்கள் மீட்பு…

பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான இடத்தில் விபசாரம்!…3 பெண்கள் மீட்பு…

பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான இடத்தில் விபசாரம்!…3 பெண்கள் மீட்பு… post thumbnail image
மும்பை:-இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. ஒரு படத்துக்கு ரூ.3 கோடி, 4 கோடி என சம்பளம் வாங்குகிறார். விளம்பர படங்கள் மூலமும் கோடி கோடியாய் சம்பாதிக்கிறார். அப்படிப்பட்ட பிரியங்கா சோப்ரா இப்போது சர்ச்சையொன்றில் சிக்கியுள்ளார். இவருக்கு மும்பையில் வீடுகள், வணிக வளாகங்கள், கடைகள், தோட்டங்கள் என நிறைய சொத்துக்கள் உள்ளன.

அவற்றை வாடகைக்கும் குத்தகைக்கும் விட்டு இருக்கிறார். அதன் மூலமும் கணிசமான வருவாய் வருகிறது.அவர் குத்தகைக்கு கொடுத்த ஒரு வீட்டில் அழகு நிலையம் ஒன்று செயல்பட்டு வந்தது. அங்கு விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 3 இளம் பெண்களை மீட்டனர்.

இந்த தகவல் மும்பை பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரியங்கா சோப்ராவுக்கு தெரியாமலேயே இங்கு விபசாரம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அழகு நிலையம் நடத்துவதற்குத்தான் அவரிடம் குத்தகைக்கு வாங்கி இருந்தனர்.பிறகு அதை விபசாரத்துக்கு பயன்படுத்தி உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பிரியங்கா சோப்ரா அதிர்ச்சியாகி இருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி