செய்திகள்,திரையுலகம் பட அதிபர்கள் மீது நடிகை சுருதிஹாசன் புகார்!…

பட அதிபர்கள் மீது நடிகை சுருதிஹாசன் புகார்!…

பட அதிபர்கள் மீது நடிகை சுருதிஹாசன் புகார்!… post thumbnail image
சென்னை:-சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தயாரிப்பாளர்களிடம் அதிக சம்பளம் கேட்டு சுருதிஹாசன் நிர்ப்பந்திப்பதாக செய்திகள் பரவி உள்ளன. சமீபத்திய படங்கள் ஹிட்டானதால் சம்பளத்தை கணிசமாக உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சுருதிஹாசனிடம் கேட்டபோது ஆவேசப்பட்டார். அவர் கூறியதாவது:–
சம்பள விஷயத்தில் நான் கெடுபிடிகள் செய்வதாக செய்திகள் பரவி வருவது வருத்தம் அளிக்கிறது. யாரையும் நான் நிர்ப்பந்தம் செய்யவில்லை. என் உழைப்புக்கு என்ன ஊதியம் தேவையோ அதை தருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் சில தயாரிப்பாளர்கள் எனக்கு தருவதாக ஒப்புக் கொண்ட சம்பளத்தை கூட தராமல் பாக்கி வைத்துள்ளனர்.

மகேஷ்பாபு தெலுங்கில் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கிறார். அவருடன் நடிப்பதற்கு நான் கேட்கும் சம்பளத்தை தயாரிப்பாளர் தருவதற்கு தயாராக இல்லை. எனவே சம்பள விவகாரத்தில் இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி